பூவொன்று என்னைப்பார்த்து
புன்னகைத்தது அதிசயமாய்
பனித்துளிகள் என்மீது
கவித்துளிகள் பொழிந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
குயிலொன்று வாய் திறந்து
புது ராகம் இசைத்ததுவே
மயில் ஒன்று எனைச்சுற்றி
புது நடனம் புரிந்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது
நிலவொன்று அருகிலிருந்து
மலர்ககணைகள் எய்திடுமே
என் மீது போர் தொடுக்க
பட்டாம் பூச்சி பறந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
காற்றலையில் ஒருராகம்
என் காதில் கேட்டிடுமே
கானமொன்று புதிதாக
நானுமங்கே படித்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது
சிலநிமிடம் வான் வெளியில்
என் கால்கள் மிதந்திடுமே
விண்வெளிதான் என்றெண்ணி
சிறகடிப்பேன் பறப்பதற்காய்
அவள் என்னைப் பார்க்கும் போது
கடும் வெயிலில் நடந்திடவே
நடுநடுங்கி உறைந்திடுவேன்
பனி மழைதான் என்றெண்ணி
போர்வைதனை போர்த்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது
கடலலைகள் நின்றதுபோல்
என் கண்கள் உணர்ந்ததுவே
உயிரில்லா என் இதயம்
உயிர் பெற்று துடித்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது
சில மலர்கள் எனைச்சுற்றி
காதல் கோலம் போட்டிடுமே
சில வேளை என் கண்கள்
எனை மறந்து நோக்கிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
காண மழை சில வேளை
காதல் மழை பொழிந்திடுமே
காவியங்கள் சில காலம்
நம் கதையை சொல்லிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
மலர் ஒன்றைப் பறித்திடுவேன்
அவள் கரங்கள் சேர்ப்பதற்காய்
மான் விழியாள் அவள் நோக்கி
என்காதல் உரைத்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது
புன்னகைத்தது அதிசயமாய்
பனித்துளிகள் என்மீது
கவித்துளிகள் பொழிந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
குயிலொன்று வாய் திறந்து
புது ராகம் இசைத்ததுவே
மயில் ஒன்று எனைச்சுற்றி
புது நடனம் புரிந்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது
நிலவொன்று அருகிலிருந்து
மலர்ககணைகள் எய்திடுமே
என் மீது போர் தொடுக்க
பட்டாம் பூச்சி பறந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
காற்றலையில் ஒருராகம்
என் காதில் கேட்டிடுமே
கானமொன்று புதிதாக
நானுமங்கே படித்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது
சிலநிமிடம் வான் வெளியில்
என் கால்கள் மிதந்திடுமே
விண்வெளிதான் என்றெண்ணி
சிறகடிப்பேன் பறப்பதற்காய்
அவள் என்னைப் பார்க்கும் போது
கடும் வெயிலில் நடந்திடவே
நடுநடுங்கி உறைந்திடுவேன்
பனி மழைதான் என்றெண்ணி
போர்வைதனை போர்த்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது
கடலலைகள் நின்றதுபோல்
என் கண்கள் உணர்ந்ததுவே
உயிரில்லா என் இதயம்
உயிர் பெற்று துடித்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது
சில மலர்கள் எனைச்சுற்றி
காதல் கோலம் போட்டிடுமே
சில வேளை என் கண்கள்
எனை மறந்து நோக்கிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
காண மழை சில வேளை
காதல் மழை பொழிந்திடுமே
காவியங்கள் சில காலம்
நம் கதையை சொல்லிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது
மலர் ஒன்றைப் பறித்திடுவேன்
அவள் கரங்கள் சேர்ப்பதற்காய்
மான் விழியாள் அவள் நோக்கி
என்காதல் உரைத்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது
No comments:
Post a Comment