கவிதைகள்

Saturday, September 17, 2011

நிலா

இளைய நிலா
என்னவளின் வதனத்தை
ஒத்திருப்பதினால் தான்
இரவு முழுவது வானத்தையே
பார்த்துக்கொண்டு உறங்காமல்
இருக்கின்றேன்.
 
 

கொன்று விட்டது............!

அவளை நினைத்துக்கொண்டு
அமிலத்தை முன்றுதரம் குடித்தும் - நான்
இறக்கவில்லை -இன்று
அவள் சொன்ன ஒரு வார்த்தை
... என்னை ஒரு செக்கனில்
கொன்று விட்டது............!

போனதடி என் வாழ்க்கை ..

கனவு வந்ததும் ஒரு காட்சி
அதில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் உறக்கம் ...
கடவுள் வந்ததும் ஒரு காட்சி
அவர் வாரத்தில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் பக்தி
காதல் வந்ததும் ஒரு காட்சி
அதில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் வாழ்க்கை ..

காதலித்துப்பார் .......

காதலித்துப்பார் .......

கல்லறை கூட சொர்க்கமாக தெரியும்
மரணம் கூட உனக்கு உல்லாசமாக தெரியும் ...
காதலின் முடிவு மரணம் அதுபோல்
காதலின் நிரந்தர முகவரி கல்லறை
காதலித்துபார் இவை உனக்கு புரியும்.

கண்கள்

கண்களை படைத்த இறைவன் ஏன்தான்
அவளைப் பார்க்கும் படி செய்தார் ?
என் கண்கள் அவளை நினைத்து தினமும்
கண்ணீரையே வெளி விடுகின்றது ......

சுயநலவாதி

மழையில் நீ நனையும் போது
எனது குடையை உனக்கு
தருகின்றேன் இப்பொழுது சொல்
நான் சுய
லவாதியல்லவா?
 

Thursday, September 8, 2011

உனக்காக

சில வரிகள் சிக்கனமாய்
சேர்த்து வைத்து உனக்காக
சிறு கவிதை நானெழுத
முயற்சித்த வேளைகளில்
என் பேனா முடிந்ததடி......
முடிந்த பின்பும் நானெழுத
பேனா தான் இல்லையென
என் உதிரம் சிந்திட்டேன்
உனக்காக கவி எழுத