கவிதைகள்
Sunday, December 12, 2010
உன்னிடத்தில் கண்டேன்
உலகிலுள்ள அழகு அனைத்தையும்
உன்னிடத்தில் கண்டேன்
உலகிலுள்ள அன்பு அனைத்தையும்
உன்னிடத்தில் கண்டேன்
உலகிலுள்ள காதல் அனைத்தையும்
உன்னிடத்தில் கண்டேன்
இவை அனைத்துமிருக்க உன்னிடத்தில்
என்னை எப்பொழுது காண்பேன்?
உதடுகள்
உன் உதடுகள் உச்சரிக்கும் வரை
நான் உணர்ந்ததில்லை
என்னுடைய பெயர்
இத்தனை
அழகாய் இருக்குமெண்டு..!
காதல் சிலிப்பர் கட்டைகள்
என் மனதும் உன் மனதும்
ரயில் தண்டவாளம் போல்
அருகருகில் இருந்தாலும்
என்றும் இணையப் போவதில்லை
ஆனால் எம்மை காதல் என்னும்
சிலிப்பர் கட்டைகள் என்றும்
இணைத்துக் கொண்டே இருக்கும்
துடிக்குதடி
அழகிய மலரெடுத்து உந்தன் குழல் சொருகி
வண்ண மாலைதனை உந்தன் கழுத்தில் போட்டு
தங்க வளையல் கொண்டு உந்தன் கைகளில் பூட்டி
பட்டுச் சேலைதனை கொண்டு
உந்தன் மேனியில் போர்த்தி
பந்தலில் வைத்துன்னை தொட்டு
தாலி கட்ட துடிக்குதடி என் கைகள்.
I love You
இரவுத் தூக்கம் போனதடி உன்னால்
என் இதயத்தூக்கம் போனதடி
கவிதை கொண்டு உன்னை நான்
இரசித்து கொண்டு இருந்த வேளை என்
காதில் நீ சொன்ன வார்த்தை இன்று
என் உறக்கத்துக்கு வைத்ததடி முற்றுப்புள்ளி
I LOVE YOU....
தோழியே..........
தோழியே..........
என்னுடன் நீ இருந்த நாட்கள் யாவும்
இனிமையே....!
ஏனோ , இன்று நீ இருந்தும் நான்
தனிமையே....!
உன்னுடைய நட்பிலும்
காதல் இருந்தது - அனால்
என்னுடைய நட்பில்
காதல் மட்டும் தான் இருக்கிறது
முதற் கவிதை
நேரம் வீணாகுதென்று
பேனாவை எடுத்து - நான்
கவி வரைய எண்ணினேன்
அப்பொழுதுதான்........
உன்னைக் கண்டேன்
உடனே!
என் கவிதையாக
உன்னையே வரைந்தேன்
அதுவே என்
முதற்கவிதை.
பேனாவை எடுத்து - நான்
கவி வரைய எண்ணினேன்
அப்பொழுதுதான்........
உன்னைக் கண்டேன்
உடனே!
என் கவிதையாக
உன்னையே வரைந்தேன்
அதுவே என்
முதற்கவிதை.
Subscribe to:
Posts (Atom)