கவிதைகள்

Monday, May 16, 2011

கண்ணீர்

கண்களை படைத்த இறைவன் ஏன்தான்
அவளைப் பார்க்கும் படி செய்தார் ?
என் கண்கள் அவளை நினைத்து தினமும்
கண்ணீரையே வெளி விடுகின்றது ......

தெய்வங்கள்

உலகிலுள்ள தெய்வங்கள் யாவும்
காதலில் தோல்வியுற்றன  போலும் - ஏனெனில்
அவை நம் போன்ற உண்மைக்காதலர்களை
என்றென்றும் சேர்த்து வைப்பதேயில்லை

நாம் வாழ்ந்து காட்டுவோம் ......

முட்கள் நிறைந்த பாதையில்
செல்வதுதான்  வாழ்க்கை - அதில்
முட்களை மிதிக்காமல் செல்வது
காதல் - ஆனால் சிலர்
முட்களை மிதித்துவிட்டு ,
காதல் செய்தால் வலி ஏற்படும்
என்று கூறுகின்றனர்
ஏனோ தெரியவில்லை
முட்களில் அகப்படாமல்
வாழ்ந்தவர்கள் - இன்று
இவ்வையகத்தில் இல்லை
அதற்க்கு உதாரணமாய்
நாம் வாழ்ந்து காட்டுவோம் ......