கவிதைகள்

Tuesday, June 5, 2012

முற்றுப்புள்ளி

ஏனோ !
என் மனப்பாலையிலும்
சில நீர்த்துளிகளை சிந்தி
சென்றிருக்கிறாய் பெண்ணே
நீயின்றி என் பகலும் இரவுதனடி
இருந்தும்
உன் நினைவுகள் என்னுள்
மின்மினி பூச்சியாய்
வெளிச்சம் கட்டுகிறது
உன்னை கண்ட முதல் நாள்
நான் எடுத்த முடிவு எனக்கு
இன்று
முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

ஓர் துடிப்பு!

உன்னை எண்ணி
ஆயிரம் கவிதை எழுத எண்ணுகின்றேன்
என் பேனா முனைகள் தயங்குகின்றன
உன்னை எதிர்த்து கவி வரைய
அவைகளுக்கும் ஓர் துடிப்பு!

முறையிடப் போகிறேன் ...!

காதலிப்பது தவறா ?
அல்லது
உன் போன்ற பெண்ணை
காதலித்தது தவறா ?
குற்றமின்றி தண்டனை பெறுவது
மரண வேதனை !
பெண்மை என்பதை உன்னிடத்தில்
கண்டேன் பெண்ணே,
உன் மனதை வன்மையாக
வைத்திருக்கிறாயே !
உன்னிடம் காதலுரைத்தேன்
உன் பதிலில் எனக்கு
ஈடுபாடில்லை,
என் மரணத்தை வைத்து
இறைவனிடம் முறையிடப் போகிறேன் ...!