என் இதயத்தை பறித்து எடுத்து விட்டு
எதுவுமே தெரியாதது போல் இருக்கிறாள்
அவளின் எண்ணங்கள் எனக்கு புரிகிறது
தங்க மகள் ,அவள் தாமரை நிறம் - நிலவிலே
மூங்கிலால் செய்த அவள் மேனி , ஆகா !
அவள் கூந்தலின் மென்மை எந்த பூவிடமும்
நான் இதுவரை கண்டதில்லை - அவள்
பார்வை எனை கூர்வாள் கொண்டு
தாக்கியது போல் உடனே கொன்றுவிடும்
மாதுளம் பழம் போல் இருக்கும் அவள் கன்னம்
தேன் சுவை சிந்தும் அவள் உதடு - என்
வாழ்வில் நான் கண்டிராத புதையல்
தென்றல் அவளைத் தழுவும் போதும்
மழையில் அவள் நனைந்திடும் போதும்
நானும் அவைகளாக மாறவே எண்ணுவேன்
ஏனோ தெரியவில்லை அவள் நினைவில்
நான் கிறுக்குவதெல்லாம் கவிதைதான்
அவளை நான் காதலிக்கிறேன்......!
அவள் சொன்னால் ,
காத்திருப்பேன் கடலலை ஓயும் வரை...!