கவிதைகள்

Monday, June 11, 2012

நம்பவில்லை

பெண்ணே !
உன் அழகினை
கண்டு ரசித்த என் கண்கள்
உனக்காக கண்ணீர் சிந்துவதற்கு
சிந்திக்கின்றன ! காரணம்
நீ என்னை வெறுத்திருப்பாய்
என்று அவை நம்பவில்லை 

நியாயமா?

என் தலைவியாக
உன்னை எண்ணினேன்
அனால் நீ
என் தலைவிதியை
மாற்றிச் சென்றுவிட்டாயே
நியாயமா?

உன்னை எதிர்த்து

உன்னை எதிர்த்து
ஆயிரம் கவிதை எழுத எண்ணுகிறேன்
என் பேனா முனை தயங்குகிறது
உன்னை எதிர்த்து கவி வரைய
அவைகளுக்குள் ஓர் துடிப்பு