கவிதைகள்

Saturday, September 17, 2011

நிலா

இளைய நிலா
என்னவளின் வதனத்தை
ஒத்திருப்பதினால் தான்
இரவு முழுவது வானத்தையே
பார்த்துக்கொண்டு உறங்காமல்
இருக்கின்றேன்.
 
 

கொன்று விட்டது............!

அவளை நினைத்துக்கொண்டு
அமிலத்தை முன்றுதரம் குடித்தும் - நான்
இறக்கவில்லை -இன்று
அவள் சொன்ன ஒரு வார்த்தை
... என்னை ஒரு செக்கனில்
கொன்று விட்டது............!

போனதடி என் வாழ்க்கை ..

கனவு வந்ததும் ஒரு காட்சி
அதில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் உறக்கம் ...
கடவுள் வந்ததும் ஒரு காட்சி
அவர் வாரத்தில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் பக்தி
காதல் வந்ததும் ஒரு காட்சி
அதில் நீயும் நானும் என்றவுடன்
போனதடி என் வாழ்க்கை ..

காதலித்துப்பார் .......

காதலித்துப்பார் .......

கல்லறை கூட சொர்க்கமாக தெரியும்
மரணம் கூட உனக்கு உல்லாசமாக தெரியும் ...
காதலின் முடிவு மரணம் அதுபோல்
காதலின் நிரந்தர முகவரி கல்லறை
காதலித்துபார் இவை உனக்கு புரியும்.

கண்கள்

கண்களை படைத்த இறைவன் ஏன்தான்
அவளைப் பார்க்கும் படி செய்தார் ?
என் கண்கள் அவளை நினைத்து தினமும்
கண்ணீரையே வெளி விடுகின்றது ......

சுயநலவாதி

மழையில் நீ நனையும் போது
எனது குடையை உனக்கு
தருகின்றேன் இப்பொழுது சொல்
நான் சுய
லவாதியல்லவா?
 

Thursday, September 8, 2011

உனக்காக

சில வரிகள் சிக்கனமாய்
சேர்த்து வைத்து உனக்காக
சிறு கவிதை நானெழுத
முயற்சித்த வேளைகளில்
என் பேனா முடிந்ததடி......
முடிந்த பின்பும் நானெழுத
பேனா தான் இல்லையென
என் உதிரம் சிந்திட்டேன்
உனக்காக கவி எழுத

Thursday, May 19, 2011

அவள் என்னைப் பார்க்கும் போது

பூவொன்று என்னைப்பார்த்து
புன்னகைத்தது  அதிசயமாய்
பனித்துளிகள் என்மீது
கவித்துளிகள் பொழிந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

குயிலொன்று வாய் திறந்து
புது ராகம் இசைத்ததுவே
மயில் ஒன்று எனைச்சுற்றி
புது நடனம் புரிந்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது

நிலவொன்று அருகிலிருந்து
மலர்ககணைகள் எய்திடுமே
என் மீது  போர் தொடுக்க
பட்டாம்  பூச்சி பறந்திடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

காற்றலையில் ஒருராகம்
என் காதில் கேட்டிடுமே
கானமொன்று புதிதாக
நானுமங்கே படித்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது

சிலநிமிடம் வான் வெளியில்
என் கால்கள் மிதந்திடுமே
விண்வெளிதான்  என்றெண்ணி
சிறகடிப்பேன் பறப்பதற்காய்
அவள் என்னைப் பார்க்கும் போது

கடும் வெயிலில் நடந்திடவே
நடுநடுங்கி உறைந்திடுவேன்
பனி மழைதான் என்றெண்ணி
போர்வைதனை போர்த்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது

கடலலைகள் நின்றதுபோல்
என் கண்கள் உணர்ந்ததுவே
உயிரில்லா என் இதயம்
உயிர் பெற்று துடித்ததுவே
அவள் என்னைப் பார்க்கும் போது

சில மலர்கள் எனைச்சுற்றி
காதல் கோலம் போட்டிடுமே
சில வேளை என் கண்கள்
எனை மறந்து நோக்கிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

காண மழை சில வேளை
காதல் மழை பொழிந்திடுமே
காவியங்கள் சில காலம்
நம் கதையை சொல்லிடுமே
அவள் என்னைப் பார்க்கும் போது

மலர் ஒன்றைப் பறித்திடுவேன்
அவள் கரங்கள் சேர்ப்பதற்காய்
மான் விழியாள் அவள் நோக்கி
என்காதல் உரைத்திடுவேன்
அவள் என்னைப் பார்க்கும் போது



Monday, May 16, 2011

கண்ணீர்

கண்களை படைத்த இறைவன் ஏன்தான்
அவளைப் பார்க்கும் படி செய்தார் ?
என் கண்கள் அவளை நினைத்து தினமும்
கண்ணீரையே வெளி விடுகின்றது ......

தெய்வங்கள்

உலகிலுள்ள தெய்வங்கள் யாவும்
காதலில் தோல்வியுற்றன  போலும் - ஏனெனில்
அவை நம் போன்ற உண்மைக்காதலர்களை
என்றென்றும் சேர்த்து வைப்பதேயில்லை

நாம் வாழ்ந்து காட்டுவோம் ......

முட்கள் நிறைந்த பாதையில்
செல்வதுதான்  வாழ்க்கை - அதில்
முட்களை மிதிக்காமல் செல்வது
காதல் - ஆனால் சிலர்
முட்களை மிதித்துவிட்டு ,
காதல் செய்தால் வலி ஏற்படும்
என்று கூறுகின்றனர்
ஏனோ தெரியவில்லை
முட்களில் அகப்படாமல்
வாழ்ந்தவர்கள் - இன்று
இவ்வையகத்தில் இல்லை
அதற்க்கு உதாரணமாய்
நாம் வாழ்ந்து காட்டுவோம் ......

Thursday, March 17, 2011

என்னுடன் வந்துவிடு .........!

உன்னை கண்ட நாள் முதல்
துடித்த என் இதயம் - இன்று
துடிக்காமல் நின்றுவிட்டது ,
காரணம்  புரியவில்லை ஏனோ !
மறுபடியம் துடிக்குமென்று
உன் அருகில் வந்தேன் அப்பொழுதும்
துடிக்கவில்லை - என் இதயம் என்னும்
கணணியிலே காதல் என்னும் வைரஸ்
இதயத்துடிப்பை நிறுத்திவிட்டது
update பண்ணினேன் service பண்ணினேன்
துடிக்கவில்லை !
கண்கள் என்னும் விண்டோஸ் போட்டு
இதயக்கனணியை துடிக்க வைக்க
உன்னால் மட்டுமே முடியும்
தயவு செய்து என்னுடன் வந்துவிடு .........!

அச்சம்

நான் சாவதற்கு
அஞ்சுகிறேன் !
என்னுடன் உன்
நினைவுகளும்
செத்துவிடும்
என்பதனால் !