கவிதைகள்

Wednesday, December 29, 2010

புத்தாண்டு வாழ்த்துக்கள்

மனித நேய வாதியென மாநிலத்தில் அவதரித்த 
புனிதராம் யேசுபிரான் பொன்னடிகள் போற்றுகின்ற 
எனதினிய நண்பர்கள்  எல்லோர்க்கும் எந்தனது 
மனதினிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ஏற்றிடுவீர் !

ஈராயிரத்து பதினொன்று எல்லோர்க்கும் 
தீராத் துயர்போக்கும் சிறப்பாண்டாய் மலரட்டும் !
போராயுதம் எல்லாம் போயகல இந்நாடு 
சீராய் விளங்கட்டும் செப்புகிறேன் வாழ்த்துக்கள் !!