கவிதைகள்

Monday, June 25, 2012

சொல்வாயா உன் காதல் சம்மதத்தை

சலனமில்லாத பார்வையிலும் உந்தன்
திரண்ட கார்குழல் அசைவினிலும் மயங்கி
அரண் புக துடிக்கின்றேன் உன் மனதினுள்
அறிவாயா பெண்ணே! ஏற்பாயா என்னை !

சந்தன நிறத்தவளே சரஸ்வதியின் குணத்தவளே
வரம் தர மாட்டாயா? உடனிருந்து நான் ரசிக்க,
இருண்ட நிற கூந்தலிலே பூச்சுட நினைக்கின்றேன்
தருவாயா என்னுயிரை , நீ தானே என்னுயிரே

சற்று நேரம் உன்னை நீங்கி நான் நகர்ந்தால்
மரணமே வந்திடும் போல் உணர்கின்றேன்
வரண் வேண்டாம் நீ வந்தால் போதுமே
காப்பாயா என்னை பல நாட்கள் உயிர்வாழ !

சத்தியமாய் சொல்கிறேன் கேள் பெண்ணே
தூரம் சென்றாலும் நான் வருவேன் - உன்னடியில்
தவண்டு வர தவமிருப்பேன் , எனக்காக நீ வந்து
சொல்வாயா ஒருவார்த்தை உன் காதல் சம்மதத்தை. 

No comments: