கவிதைகள்

Saturday, June 10, 2017

உண்மைதான்


கல்லில் ஒரு சிற்பம்
ஒளிந்திருப்பது உண்மைதான்
ஆனால் !
நல்ல சிற்பி அதை காணும்வரை
அது வெறும் கல்தான்.
சொல்லில் ஒரு கவிதை
ஒளிந்திருப்பது உண்மைதான்
அனால் !
நல்ல கவிஞன் அதை கிறுக்கும் வரை
அது வெறும் சொல் தான்.
முள்ளில் ஒரு வலி
ஒளிந்து இருப்பது உண்மைதான்
ஆனால் !
நல்ல கால் அதை மிதிக்கும் வரை
அது வெறும் முள் தான்.

இப்படித்தான் இதயமும்
நல்ல காதல் வரும் வரை
அது வெறும் தசை தான்.

No comments: